top of page
Search

உழவர்!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • May 24, 2021
  • 1 min read

நிலமெல்லாம் கொடுத்தேனடா,

நெல் மணி காணத் தவித்தேனடா,


உழவர் கை படாமலே,

வயல் உயிர் பிரிந்து துடித்தேனடா!


உலகெல்லாம் எப்பொழுதும்,

ஊண் தவறாமல் மகிழ்ந்தாரடா,


இனி உணவின்றி காலம் கழிந்தோடிடும்,

என புரியாது புறக்கணித்தாரடா!


கால் இரண்டும் சகதியைத் தொடாமலே,

விரல் ஊண் தொட முடியாதடா,


இதை மறவாது தினந்தோறும்,

உன் கடமையை தவறாதேடா!


 
 
 

Recent Posts

See All
நூறில் ஒன்று!

அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...

 
 
 

Comentários


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page