top of page
Search

என் அவள்!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • Sep 10, 2021
  • 1 min read

நகராத நேரம் சிலையாக மாறும்,

இவள் நாவின் இசைத் தொடரவே!


இவள் குரலோடு ஒரு குயில் பாட்டுப் பாட,

மனம் ஆசை பெருகவே!


இதழ் இரண்டும் அசைகின்ற அழகோ,

ஒரு குழந்தையின் மழலையே!


இவள் விழியில் என் முகம் விழுக,

இவள் வெட்கம் மலரவே!


எதிர்பாரா நல் தருணங்கள்,

இவளோடு நான் காண,


மனம் இரண்டும் ஒன்றாகி,

இடைவெளி இரு துண்டாகும்!


இருள் இவளை பயமுறுத்த,

வான் மதி திரண்டு ஒளி அனுப்பும்,


இவள் உறங்கும் வரை அது விழித்திருந்து,

பெண் இமைகளைத் தட்டி எழுப்பும்!


 
 
 

Recent Posts

See All
நூறில் ஒன்று!

அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...

 
 
 

Comentários


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page