top of page
Search

என்றும் உன்னுடன் நான்!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • May 9, 2021
  • 1 min read

Updated: May 24, 2021

இவள் விழி இரண்டின் வழியே,

இவள் இதயம் நுழைந்தேன்,


இதயத்தில் இடம் ஒன்று தேடி,

இரவு முழுதும் அலைந்தேன்!


உறக்கங்கள் தொலைத்தபடி சிலையாக நின்றேன்,

ஒரு நொடி இவள் பார்வை பட என்னையே மறந்தேன்!


தலையணையை புறம் தள்ளி இவள் மடியில் சாய்ந்தேன்,

கனவிலும் இவள் குரல் கேட்டு உறக்கத்தில் சிரித்தேன்!


வான் மழை மண் தரை தொடவே,

என் உடல் அனல் கொஞ்சம் தனியும்,


கண் இமை இரண்டும் மூடிய படியே,

பல கடிதங்கள் எழுதும்!


எதுவும் இடையில் வராமல் இருந்திட,

இப்புவி பார்த்து கொள்ளும்,


நம் இருவரின் அழகை ரசித்திட,

நிரல் அனைத்தையும் அது ஒதுக்கி விடும்!


 
 
 

Recent Posts

See All
நூறில் ஒன்று!

அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...

 
 
 

Comentarios


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page