top of page
Search

கடலோர கவிதை!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • Dec 28, 2021
  • 1 min read

ஓயாத அலை ஒரு பக்கம் இசை பாட,

ஓடாத மனமும் இதைக் கண்டு அலைபாயும்!


துணையின்றி நிற்கும் என் இரு கால்களை இவன் அணைத்திட,

உடல் சிலையாக மாறி சில நொடியில் கரைந்தோடும்!


நான் பின் சென்று அழைத்தால், இவன் முன் வந்து நிற்பான்,

இவனை பின் தொடர்ந்து சென்றால், சிறு தூரம் செல்வான்!


அலையோடு விளையாடும் சில நேரம் ஒரு மோகம்,

மனம் அழகான நினைவினை கடத்திச் செல்லும்!


வயதொன்றும் அறியாமல் இவன் நம்மோடு உறவாட,

நமக்குத் தெரியாமல் நம் சுமைகளை இவன் எடுத்துச் செல்வான்!


 
 
 

Recent Posts

See All
நூறில் ஒன்று!

அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...

 
 
 

コメント


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page