top of page
Search

சொல்லாத காதல்!

  • Writer: Nanda Rajarajan
    Nanda Rajarajan
  • Dec 28, 2021
  • 1 min read

இவளைக் கண்டவுடன் உணரவில்லை எவ்வித மாயம்,

இவளுடன் கடந்த பின் வாழ்வே வர்ணஜாலம்!


புதியதாய் உருவெடுத்தது நட்பின் ஆழம்,

புது புது அர்த்தங்கள் என் நெஞ்சின் ஓரம்!


குழந்தை போலே இவள் மனம் இருக்கும்,

கொஞ்சிவிட என் கைகள் துடிக்கும்!


இமைகள் மூடாமல் சண்டைப் போடும்,

இவளின் பார்வைத் தேடி ஊர்வலம் போகும்!


இவள் குணம் யாவிலும் கண்ணியம் தோன்றும்,

மறுபடி என் இதயம் இவளுக்குள் விழும்!


தேடிய பெண் கண்முன் இருக்க,

மூடிய கதவுகள் ஓராயிரம் தடுக்கும்!


மறு பிறவி பிறக்கும்,

என் கைகள் இவள் கைகளைப் பிடிக்கும்!


சொல்லாத காதல்....சில சமயம் சுகம் கொடுக்கும்!


 
 
 

Recent Posts

See All
நூறில் ஒன்று!

அழகுக்கு இவள் பெயரை அகராதி கூற, அடி நெஞ்சில் ஒரு மயக்கம்! புதிதாய்த் தடுமாற்றம் ஏனோ மனதில், பூகம்பம் வெடிக்கும்! இயற்கையின் சிறு...

 
 
 

Comments


Post: Blog2_Post

தாய்த்தமிழில் ஒரு எழுத்துக் களஞ்சியம்

©2020 by நினைவுச் சுவடுகள். Proudly created with Wix.com

bottom of page